Wednesday, May 26, 2010

ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம்

                 TRADING LIVE DATA VISIT MY BLOG : http://www.tradersfirst.blogspot.com/
அம்பானி சகோதரர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.18,000 கோடி லாபம் கிடைத்தது.
அம்பானிகளுக்கிடையில் சமரசம் ஏற்பட்டதால், கடந்த திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், இந்த இரு குழும நிறுவன பங்குகளும் ஏற்றத்துடன் இருந்தன. அதிகபட்சமாக அனில் அம்பானியின் ஆர்என்ஆர்எல் பங்கு 22.6 சதவீதம் உயர்ந்து ரூ.55 ஆனது. இதுபோல் முகேஷின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ப்ரா 11.3 சதவீதம் உயர்ந்தது. இதுதவிர, இந்த இரு குழுமங்களைச் சேர்ந்த 9 நிறுவன பங்குகளும் அதிக அளவில் உயர்ந்தால் இவற்றின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி அதிகரித்தது.
‘‘அம்பானி சகோதரர்களிடையே சமரசம் ஏற்பட்டதால் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. குறிப்பாக, முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் குழும பங்குகளை அதிக அளவில் வாங்கிக் குவித்தனர்’’

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger