Monday, May 17, 2010

T 20 உலக சாம்பியன்-இங்கிலாந்து

மூன்றாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வந்தது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த தொடரில் லீக், மற்றும் சூப்பர் 8 உள்பட அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியே காணாமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.
ஆனால் இங்கிலாந்தை பொறுத்தவரையில் ஒரு தோல்வி, ஒரு டிராவை சந்தித்து அது இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது. நேற்று இரவு பார்படாஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வீரர்கள் வாட்சன், வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சைடு பாட்டம் முதல் ஓவரை வீசினார். 3வது பந்தில் வாட்சன் அவுட் ஆனார். 2 ரன் எடுத்திருந்த அவர் ஸ்வானிடம் கேட்ச் கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியாவுக்கு சைடு பாட்டம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
அடுத்த ஓவரில் வார்னர் ரன் அவுட்(2ரன்) ஆனார். 3வது ஓவரில் பிராட் ஹேடினை(1ரன்) பெவிலியனுக்கு அனுப்பினார் சைடு பாட்டம். மூன்று ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தபோதும் ஆஸ்திரேலிய வீரர்கள் பரபரப்போ, பதற்றமோ இன்றி வெற்றி பெற்று விடலாம் என்ற தெம்புடனேயே காணப்பட்டனர்.
பவர்பிளையான 6 ஓவர் வரை ஆஸ்திரேலிய வீரர்கள் 24 ரன்களே எடுத்திருந்தனர். அந்த அளவுக்கு பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். கிளார்க் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 35 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது சைடுபாட்டம் பந்தில் கீஸ்வெட்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு டேவிட் ஹஸ்சி வந்து ஆஸ்திரேலிய அணிக்கு தெம்பு ஊட்டும் வகையில் ரன்களை சேர்த்தார். ஆனாலும் 10 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஹஸ்சியுடன் கேமரூன் ஒயிட் ஜோடி சேர்ந்ததும் ரன்களும் மளமளவென உயரத்தொடங்கியது. இரு வரும் பந் 1397776754 களை விர ட்டி அடித்தனர். ஒயிட் 30 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் விளாசி இருந்தார்.
இதைத்தொடர்ந்து டேவிட் ஹஸ்சியுடன் அவரது சகோதரர் மைக் கேல் ஹஸ்சி ஜோடி சேர்ந்தார். அணி நெருக்கடியான நிலையில் உள்ளதை அறிந்து இருவரும் அதிரடியாக ஆடினர். 20 வது ஓவரில் டேவிட் ஹஸ்சி 59 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.20 ஓவர் நிறைவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுத்தது.
சைடு பாட்டம் 2, ஸ்வான் 1, லூக் ரைட் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. லம்ப், கீஸ்வெட்டர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். நேனஸ் ஆக்ரோஷ பந்து வீச்சை தொடங்கினார். 2வது ஓவரில் டேவிட் ஹஸ்சியிடம் கேட்ச் கொடுத்து லம்ப் (2) வெளியேறினார்.ஆனால் கீஸ்வெட்டர் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். அவர் 63 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனா£ர். அப்போது அணியின் ஸ்கோர் 118.
பீட்டர்சன் 59 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 121. வெற்றிக்கு இன்னும் 27 ரன்களே தேவை என்ற நிலையில் கூலிங்வுட், மார்கன் ஆகியோர் பொறுப்புடன் ஆடி ரன்களை எடுத்தனர். 17 ஓவரில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது.
கிரிக்கெட்டின் தாயகம் என்று இங்கிலாந்து புகழப்பட்டாலும் அந்த நாடு இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வென்றது இல்லை. நேற்று மூன்றாவது டி20 உலக கோப்பையை வென்று அந்த குறையை போக்கிகொண்ட மகிழ்ச்சியில் கோப்பையுடன் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கூத்தாடினார்கள்.
63 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றிதேடித்தந்த கீஸ்வெட்டர் ஆட்ட நாயகனாகவும், தொடரில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவும், 2வதாக பாகிஸ்தானும், 3வதாக இங்கிலாந்தும் பெற்று உள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger