Saturday, May 22, 2010

ஏர் இந்தியா விமானம் விபத்து 160 பேர் பலி

துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் மங்களூர் ஏர்போர்ட் அருகில் விபத்து 160 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சபடுகிறது.
உயிர் இழந்தவர்களில் அதிக பேர் கர்நாடக மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள். போதிய வெளிச்சமின்மை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என போலீஸ் தரப்பில் சொல்லபடுகிறது .
       எது எப்படி ஆயினும் இதன் விலை 160 பேரின் உயிர்.
உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு வலைபூவுலக நண்பர்கள் மற்றும்
வாசகர்கள் சார்பாக எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்து கொள்கிறோம்.
விபத்தில்  பலியான அனைத்து உயிர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
      விபத்துக்கு என்ன காரணம் சொல்லபட்டாலும்,இந்தியாவின் விமானத்துறையில்
இன்னும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு இன்னும் இது மாதிரி விபத்துக்கள் ஏற்படா வண்ணம் நவீன படுத்தப்பட வேண்டும்.
எத்தனை நாட்களுக்கு தான் நாம் இதுமாதிரி விபத்துக்களை சந்திக்க வேண்டுமோ?



0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger