Monday, August 23, 2010

காண்டம் காலை வாருவது ஏன்?

 கருத்தடை சாதனம் ஆணுறையை பலர் முறையாக பயன்படுத்தாததால், அது 100 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதில்லை என்கின்றனர் டாக்டர்கள்.
கருத்தடை மற்றும் பாலியல் நோய்களை தடுப்பதில் காண்டம் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் அதை பலர் சரியான முறையில் உபயோகிக்காததால், 100 சதவீத வெற்றி கிடைப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக பல டிப்ஸ்களை வழங்கியுள்ளனர் நிபுணர்கள். மெடிக்கல் ஷாப்பில் இருந்து காண்டம் பாக்கெட்டை வாங்கிச் சென்றவுடன், அதை ‘கார் டேஷ்போர்டு’ மற்றும் இரு சக்கர வாகனங்களின் பவுச் மற்றும் பெட்டிகளில் வைக்கக் கூடாது. இது தவறு. வாகனத்தில் இருக்கும் சூடு ஆணுறையின் மெல்லிய லேட்டக்ஸ் ரப்பரை பாதிக்கும். இதனால் அதை உபயோகிக்கும் போது கிழிந்து விடுகிறது.
விரல்களின் நகமும், ஆணுறையில் எளிதில் ஓட்டை போட்டு விடுமாம். எனவே, காண்டம் உபயோகிப்போர் விரல் நகம் அதிகம் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாக்கெட்டை பல் மற்றும் கூர்மையான பொருட்களால் கிழித்தாலும், காண்டம் பாதிப்படையும்.
சிலர் கூடுதல் பாதுகாப்புக்காக இரண்டு காண்டம்களை ஒரே நேரத்தில் மாட்டுகின்றனர். இது முற்றிலும் தவறு. இரண்டு காண்டம் உபயோகித்தால், அது நழுவுவதற்கும், கிழிவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒன்றை மட்டுமே உபயோகிக்க வேண்டும், அதை சரியாக உபயோகிக்க வேண்டும். காண்டம் அணிய ‘பார்ட்னர்’ உதவியை நாடினால், அதை உபயோகிக்கும் வழிமுறைகளை அவருக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நுனிப் பகுதியில் காற்றுக் குமிழ்கள் புகுந்து ஆணுறையை சேதமாக்கிவிடும் வாய்ப்புகள் உள்ளன.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger