பங்குச் சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 95, நிஃப்டி 27 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. காலை 9.40 மணியளவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 67.45 புள்ளிகள் (BSE-sensex) அதிகரித்து, குறியீட்டு எண் 17,761.65 ஆக உயர்ந்தது. Aமெரிக்க பங்குச் சந்தையில் கடந்த 18 மாதங்களாக இல்லாத அளவு வெள்ளிக் கிழமை உயர்ந்தது. இன்று ஆசிய நாட்டு சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவியது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.20 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5,324.30 ஆக உயர்ந்தது.
மிட்கேப் 47.55, சுமால்கேப் 73.94, பிஎஸ்இ-500 36.82 புள்ளிகள் அதிகரித்தன.
காலை 9.40 மணியளவில் 1582 பங்குகளின் விலை அதிகரித்தது. 614 பங்குகளின் விலை குறைந்தது. 60 பங்குகளின் விலை மாற்றமில்லை.
காலையில் உலோகம், வங்கி, பொதுத்துறை பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது. பெட்ரோலியம், மருத்துவ துறை பிரிவு குறைந்து இருந்தது.
Monday, April 26, 2010
பங்குச் சந்தை-TODAY VOLATILE MARKET
Posted by
INDIA 2121
at
Monday, April 26, 2010
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அண்ணே! நான் பாவம்!
vanakkam thala
sorry thala,
Post a Comment