Saturday, April 24, 2010

பங்கு சந்தை முதலிட்டார்கள்- கவனம்

பங்குச் சந்தைகளில் இன்று மாற்றம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 77, நிஃப்டி 22 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது. பங்குச் சந்தைகளில் நேற்று அதிக மாற்றத்துடன் இருந்தது. ஆனால் இறுதியில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்றும் பங்குச் சந்தை அதிக மாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. காலை 9.25 மணியளவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 86.79 புள்ளிகள் (BSE-sensex) அதிகரித்து, குறியீட்டு எண் 17,660.78 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 21.15 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 5290.50 ஆக உயர்ந்தது. மிட்கேப் 38.69, சுமால்கேப் 74.64, பிஎஸ்இ-500 28.54 புள்ளிகள் அதிகரித்தன. காலை 9.28 மணியளவில் 1140 பங்குகளின் விலை அதிகரித்தது. 509 பங்குகளின் விலை குறைந்தது. 58 பங்குகளின் விலை மாற்றமில்லை. காலையில் உலோகம், அதிவேக நுகர்வோர் விற்பனை பொருட்கள், மின்சாரம், மருத்துவ துறை பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண் சிறிது அதிகரித்தது.
பங்கு சந்தை ஊசலாட்டமாக இருப்பதால் முதலிட்டார்கள் கவனமாக செயல்படவும்.
நேற்றை போலவே இன்றும் வெள்ளி கிழமை சந்தை ஊசலாட்டமாகவே இருந்ததது .அடுத்த வாரம் சந்தை இன்னும் ஐம்பது புள்ளிகள் வரை உயரவோ அல்லது சரியாவோ வாய்ப்புள்ளது .


0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger