Tuesday, April 27, 2010

GENTLE MAN -சச்சின் டெண்டுல்கர்


சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: முக்கியமான கட்டத்தில் கேட்ச்களை தவறவிட்டதால் தோல்வியடைந்தோம். சுருக்கமாக சொல்ல போனால் கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெறச்செய்துவிட்டன. 2&வது பேட் செய்த நாங்களும் இலக்கை எட்டுவதற்கான உத்வேகத்தில் ஆடவில்லை. இன்று எங்களுக்கு கொஞ்சம் சரிவு ஏற்பட்டுவிட்டது. பொல்லார்டு அற்புதமாக தொடங்கினார். ஆனால் அவர் இறங்குவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இருப்பினும் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் விளையாட முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.


இன்றைய நாள் எங்களுக்கு இல்லை. இன்றைய நாளை தவிர இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். அனைத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் நன்றி. இறுதிப்போட்டியில் நுழைவது என்பது மிகப்பெரிய பயணம். அதே மிகப்பெரிய மரியாதைதான். வெற்றி பெற்ற சென்னை அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இன்று எங்களைவிட அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். வெற்றிக்கு உரியவர்கள் அவர்கள். அணியின் உரிமையாளர், ஊழியர்கள் அனைவரும் எங்களுக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தனர். அனைவருக்கும் எனது நன்றி. அனேகமாக அடுத்த வருடமும் ஐபிஎல்லில் நான் விளையாடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

வால் பையன் கமெண்ட் : கை விரல் காயத்தோடும் மும்பை அணியின் வெற்றிக்காக போராடிய உங்கள் விளையாட்டு ஆர்வத்துக்கு -SALUTE

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger