வால் பையன் கமெண்ட் : எல்லாம் சரி தான் இனி சானியா இந்தியாவில் வ சிப்பாரா? அல்லது பாகிஸ்தானிலா? , இந்தியாவுக்ககாக டென்னிஸ் ஆடுவாரா? அல்லது பாகிஸ்தானுக்கா?
Tuesday, April 20, 2010
மாலத்தீவில் சானியா-சோயிப் தேனிலவு!
ஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியாவும் கணவர் சோயிப் மாலிக்கும் தேனிலவுக்கு மாலத் தீவு செல்கின்றனர்.டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் கடும் சர்ச்சைகளுக்கு இடையே கடந்த 12ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது.இந் நிலையில் சானியா அளித்துள்ள பேட்டியில்,திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக உள்ளது. புதிய வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்கிறேன். திருமணத்துக்கு முன்பு நடந்த பிரச்சனைகளால் மிகவும் வேதனை அடைந்தேன். தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்தேன். இப்போது இரு குடும்பத்தினரும் மகிழ்சசியாக இருக்கிறோம்.விரைவில் கணவருடன் பாகிஸ்தான் செல்வேன். பாகிஸ்தானில் குடும்ப விழாக்கள் அனைத்தும் முடிந்த பிறகு தேனிலவுக்காக மாலத்தீவு செல்வோம். சோயிப் மாலிக் கணவராக வந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய விலைமதிக்க முடியாத பரிசு.எனக்கு மருமகள் என்ற கதாபாத்திரத்துக்கு அர்த்தம் தெரியாது. ஏற்கனவே எப்படி இருந்தேனோ அது போல்தான் இனிமேலும் இருப்பேன். திருமணத்துக்கு பிறகு பெரிய மாற்றம் எதுவும் வரும் என்று சொல்ல மாட்டேன். எப்போதும் போல இருப்பேன். எங்கள் 2 குடும்பத்தினரின் சந்தோஷம் எனக்கு முக்கியம்.எனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் சரியான பிறகு தொடர்ந்து விளையாடுவேன். ஆசிய போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றார்.சோயிப் மாலிக் கூறுகையில், ஹைதராபாத் மக்கள் காட்டிய அன்பை மறக்க மாட்டேன்.என் மீது விதித்துள்ள தடையை நீக்க கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அப்பீல் செய்துள்ளேன். கிரிக்கெட் போர்டின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு தலைவணங்குவேன். ஆனால் விரைவில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளேன் என்றார்.பாஸ்போர்ட்டை திரும்ப பெற்ற சோயிப்:இந் நிலையில் தன்னைத் திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதாக ஹைதராபாத்தை சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து கைப்பற்றப்பபட்ட சோயிப் மாலிக்கின் பாஸ்போர்ட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.பின்னர் இருவருக்கு இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆயிஷா புகாரை வாபஸ் பெற்றார்.இதைத் தொடர்ந்து தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க கோரி சோயிப் மாலிக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர நீதிமன்பம் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.இதையெடுத்து சோயிப் மாலிக்கிடம் இன்று பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
Posted by
INDIA 2121
at
Tuesday, April 20, 2010
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment