Wednesday, April 21, 2010

ட்வென்டி ட்வென்டி உலக கோப்பை போட்டியில் முரளி விஜய் சேர்ப்பு

மேற்கு இந்தியத் தீவுகளில் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.அதில் ஷேவாக்கும் இடம் பெற்றிருந்தார். துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஷேவாக் திடீரென காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாதிரியான காயம் அது என்பது தெரிவிக்கப்படவில்லை.இதையடுத்து ஷேவாக் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முரளி விஜய் மகிழ்ச்சியும், சிறப்பாக ஆட முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Related Posts with Thumbnails
 

Blogger