
இந்தியா - சீனா ஆகிய நாடுகளின் வளர்ச்சி இதர நாடுகளுக்கு உதவுவதாக உள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.வாஷிங்டனில் உலக வங்கியின் புதிய அறிக்கையை இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டு பேசுகையில் இதனை தெரிவித்த அந்த அறிக்கையை எழுதிய டெல்ஃபின், மேலும் கூறியதாவது: உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிக்கு தடையாக அமைந்துவிட்டது. ஆனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அபார வளர்ச்சியால் 2015 க்குள் வறுமையை ஒழிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
0 comments:
Post a Comment